Anbudan oru nodi - நட்பு FRIENDSHIP |
|
|
|
மனம் மண்டிக் கிடக்கிறது பாரமாய்.
கையிலும் பாரத்தோடு
நுழைவாயில் நலம் கேட்க,
நுழைகிறேன்
சூழ்நிலைக் கைதியாய்
அலுப்பின் துணையோடு.
தனிமையின் இருட்டுக்குள்
தள்ளிவிட்டுக்
கதவடைத்துப் போகிறது
கரையும் கால அட்டவணை.
என் நிழலே
என்னை அழுத்தி அழவைக்கிறது.
நகரவிடாதபடி
நூல்கட்டி இழுக்கிறது
பெற்றோரின் இனிய அணைப்பு.
மீண்டும் மீண்டும்
பிரிகிற அந்த விநாடிப் பொழுதை
வெறுக்கிறது மனம்.
ஐரோப்பியக் குளிரும்
இருண்ட வான்நிலையும்
விரட்டுகிறது
வேண்டாம் போய்விடலாம்
இப்பொழுதே என்பதாய்.
நிழலுக்காய்
மரத்தடி ஒதுங்க,
மரநிழலே என் மேல் பரவி
அழுத்தி அமுக்குவதாய்.
கடமைகளுக்குள் கட்டி அழ
காலம் கலைத்துக்
காவல் காக்க,
ஓய்ந்த மனதில்
வெறுப்பின்
சுவாலைக் கனல்
அனலாய் அடிக்க,
கணணியை அழுத்த...
வலை தந்த நட்புக்களின்
நல்ல வார்த்தைகள்
மருந்தாக...
மீண்டும்
நலம் கேட்டுத் தொடர்கிறாள்
குழந்தைநிலா!!!
|
Today, there have been 57969 visitors (219385 hits) on this page! |
|
|
|
|